பிறப்பு30 SEP 1929, இறப்பு30 JUN 2012
இளைப்பாறிய அதிபர் – புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை
வயது 82
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்
தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்