Colombo (News 1st) இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், மதுபானம் மற்றும் மதுசார வகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், மதுசாரங்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.