Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா தனிநபர் பிணையில் நடாஷாவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே உத்தரவிட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வௌியிட்ட குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.