Colombo(News 1st) ஹட்டன் – மல்லியப்பூ சந்தியிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று(16) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.