Sangathy
News

இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

Colombo (News 1st) இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல் சூளையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று (17) மாலை 6 மணியளவில் சுகவீனமுற்றுள்ளார்.

வயிற்று வலி காரணமாக  சந்தேகநபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இசுருபுர – இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

John David

நாடளாவிய ரீதியில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

Lincoln

தேயிலைக்கான உரத்தின் விலையை குறைக்க தீர்மானம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy