Colombo (News 1st) ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரொருவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஈக்குவடோர் பாராளுமன்ற உறுப்பினரான Fernando Villavicencio, பிரசாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு வௌியேறுகையில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காரில் ஏறுகின்ற போது 59 வயதான Villavicencio வின் தலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்செயலுக்கு தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.