Sangathy
News

பாம்பு தீண்டியதில் 56 வயது பெண் பலி

Colombo (News 1st) பசறை – கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரிந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளியொருவரை கடந்த 16ஆம் திகதி பாம்பு தீண்டியிருந்தது.

குறித்த பெண் சிகிச்சைகளுக்காக பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி 56 வயதான கந்தன் முத்துலட்சுமி நேற்று முன்தினம்(18) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்று(19) கையளிக்கப்பட்டு நாளை(21) இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

Related posts

Members of independent commissions should be nominated – former EC member

Lincoln

Ranawaka asks MR to retire

Lincoln

Jordan deports 31 Lankans

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy