Colombo (News 1st) நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 50,000 ஏக்கர் விவசாய காணிகள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
உடவலவ பிரதேசத்தில் மாத்திரம் ஏற்பட்ட சேத விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு 5 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.