Sangathy
News

வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நுவரெலியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 1,37,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மீரந்தெனிய பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அனுராதபுரம், நுகேகொட, களுத்துறை, புதுக்கடை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

Lincoln

இன்ஸ்டாகிராம், முகநூல் ப்ளூ டிக் வசதிக்கு இந்தியாவில் 699 ரூபா கட்டணம் நிர்ணயம்

Lincoln

மஹவ – அநுராதபுரம் ரயில் சேவை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy