Colombo (News 1st) பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் இவ்வாறான 20-இற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அதற்கமைய, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கையாள்வதற்கான விசேட அறிவுறுத்தல்களை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.