Sangathy
IndiaNews

இந்திய நாடாளுமன்றுக்குள் கண்ணீர் புகைக் குண்டுடன் நுழைந்தவர்களால் பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

சபை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பக்கம் இருந்து திடீரென கூச்சலிட்டவாறு இருவர் சபாநாயகரை நோக்கி சென்றதோடு இரு கண்ணீர் புகை குண்டுகளையும் எறிந்துள்ளனர்.

பின்னர் , உறுப்பினர்களால் அவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு விபத்துகளில் ஐவர் பலி

Lincoln

சர்ச்சைக்குரிய செய்தி தொடர்பாக ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்

Lincoln

IMF வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy