Sangathy
News

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

Colombo (News 1st) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று(14) காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் அசமந்தப்போக்கு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரும் சுகாதார அமைச்சும் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையினால் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு காலத்தில் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என வைத்தியர் சமில் விஜேசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

ஹந்தான மலைப்பகுதியில் சிக்கியிருந்த பல்கலை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

John David

President pledges fullest state support to take Theravada Buddhism to the world

Lincoln

உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy