Sangathy
News

மேலும் 15 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Colombo (News 1st) மேலும் 15 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த முட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கிடைக்கும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 10 மில்லியன் முட்டைகள் தொடர்பான அறிக்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், முட்டை விநியோக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 2 மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படும் அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முதியோர், நோயாளருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை மறுதினம்(25) முதல் வழங்கப்படும் – ஷெஹான் சேமசிங்க

Lincoln

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Lincoln

Farmers warn against releasing 1 mn kilos of rice held at Port

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy