Colombo (News 1st) கண்டி – ஹந்தான மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று சிக்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பனி மூட்டம் மற்றும் மழையுடனான வானிலையினால் 181 மாணவர்கள் குறித்த மலைப்பகுதியில் சிக்கியிருந்தனர்.
நேற்று(02) மாலை முதல் மாணவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
மீட்புப் பணிகளில் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ராகம விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரே சுற்றுலா சென்றிருந்தனர்.
You must be logged in to post a comment.