Colombo (News 1st) அமரர் S.W.R.D.பண்டாரநாயக்கவின் 125 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
பிரித்தானியாவில் சட்டக்கல்வியை நிறைவு செய்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கிய பண்டாரநாயக்க, 1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியை தோற்றுவித்தார்.
S.W.R.D.பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு இலங்கையின் நான்காவது பிரதமராக பதவியேற்றார்.
1959 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.