Sangathy
News

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  சென்றிருந்த போது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை 09 மணியளவில் ஆரம்பமான வாக்குமூலம் பெறும் நடவடிக்கை 9 மணித்தியாலங்களை கடந்த நிலையில், அவரை கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள கட்டணம் அறவிடும் முறைமை அறிமுகம்

Lincoln

புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபைக்கு இடைக்கால தடையுத்தரவு

John David

குடிநீர் பிரச்சினைகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy