வட ஐரோப்பிய நாடான சுவீடனின் மேற்கு கடற்கரையோர நகரமான கோதன்பர்க்கிலுள்ள “ஓஷியானா வாட்டர் பார்க்” எனும் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்த நிலையில், நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதுடன் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது.
இத்தீ விபத்தில் 16 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், ஒருவர் மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.