Sangathy
News

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் இந்திய மீனவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் 03 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 22 பேரும் நேற்றிரவு(09) கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த 22 இந்திய மீனவர்களும், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

2023 முதல் காலாண்டில் இலங்கை முதலீட்டுச் சபைக்கு 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைத்துள்ளன

Lincoln

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்யப்படவுள்ளன

Lincoln

ஒடிசா ரயில் விபத்து: பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy