Sangathy
Cinema World

ஷூட்டிங் ஸ்பாட்டில் சினேகாவை பிராங்க் செய்த விஜய் : தளபதி இப்படியெல்லாம் செய்வாரா..!

விஜய்யின் வசீகரா,அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் பாலசுப்ரமணியம். இவர் வசீகரா படத்தின் போது விஜய் செய்த பிராங்க் பற்றி பேசியுள்ளார்

விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் the greatest of all time என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது GOAT படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா என பலர் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து விஜய் அடுத்ததாக தன் கடைசி திரைப்படமான தளபதி 69 பட வேலைகளை துவங்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் யார் என கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் தற்போது எச்.வினோத் தான் தளபதி 69 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அநேகமாக ஜூன் மாதம் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்த பிராங்க் பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பொதுவாக விஜய் எப்போதும் அமைதியாகவே இருப்பார் என்றும், யாருடனும் அவ்வளவாக பேசமாட்டார் என்றும் தான் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் விஜய் ஒருவரிடம் நெருங்கி பழகிவிட்டால் அவர்களிடம் செம ஜாலியாக இருப்பாராம். செட்டே கலகலப்பாக இருக்குமாம். அதுபோல ஒரு சம்பவத்தை தான் பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் கூறியிருக்கின்றார்.

விஜய்யின் நடிப்பில் வெளியான வசீகரா, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் பாலசுப்ரமணியம். இவர் வசீகரா படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் செய்த பிராங்க் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, விஜய் வசீகரா செட்டில் செம ஜாலியாக இருந்தார். ஷூட்டிங் முடிந்து இரவு நேரம் அனைவரும் ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்தோம்.

ஒரு இரவு 12 மணிபோல என் ரூமின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்து பார்த்தால் யாருமே இல்லை. மறுபடியும் ரூமின் கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தேன். தூரத்தில் இரண்டு உருவம் கருப்பு கலர் பெட்ஷீட்டை அணிந்துகொண்டு ஓடியது. அதை பார்த்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது. உடனே ரூமிற்குள் சென்று படுத்துவிட்டேன். ஆந்த இரண்டு உருவம் வேறு யாருமல்ல. விஜய்யும் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டரும் தான்.

இதைப்போல சினேகாவின் ரூமையும் இருவரும் தட்டி இருக்கின்றனர். அவன் மற்றவர்களை போலவே பயந்துவிட்டார். ஆனால் மறுநாள் மற்றவர்களுக்கு எல்லாம் விஜய் தான் இதை செய்தார் என தெரிந்துவிட்டது. ஆனால் சினேகாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரியாது. அவர் ஏதோ பேய் இருப்பதாக கூறி ரொம்ப பயந்துவிட்டார்.

அதன் பிறகு தான் சினேகாவிடம் விஜய் தான் பிராங்க் செய்தார் என கூறினோம் என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், விஜய்யா இப்படி பிராங்க் செய்தது என ஆச்சர்யப்பட்டு கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

Related posts

மணிகண்டனை பாராட்டிய உதயநிதி : ஏன் தெரியுமா?

Lincoln

நடிகர் பிரசாந்துக்கு விரைவில் திருமணம்..!

tharshi

வைரலாகும் ரஜினியின் லால்சலாம் டிரைலர்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy