Sangathy
News

பொரளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Colombo (News 1st) பொரளை லெஸ்லி ரனகல மாவத்தையின் ரயில் கடவை அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த, அடையாளம் தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

களனியை சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்காண காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், தப்பிச்சென்ற துப்பாக்கிதாரிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

President waives Special Commodity Levy on Imported Dates for Ramadan

Lincoln

Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று(11) ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று(10) 24 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. 10 அலுவலக ரயில்கள், 6 தபால் ரயில்கள் மற்றும் தூரசேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று(10) சில ரயில் சேவைகள் தாமதமானதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார். ரயில்வே வணிக பிரதி பொதுமுகாமையாளர் பதவிக்கு ஊழல்வாதி என தெரிவிக்கப்படும் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம்(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ரயில் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

Lincoln

தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் தீ

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy