Sangathy
News

கிணற்றில் வீழ்ந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

Colombo (News 1st) வாரியபொல – பண்டாரகொஸ்வத்தை பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 4 வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குழந்தை வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின்புறத்தில் காணப்பட்ட கிணற்றின் சுமார் 2 அடி உயரம் கொண்ட மதிலின் ஊடாக குழந்தை கிணற்றில் வீழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Youngest Prime Minister for Economically drowning Great Britain

Lincoln

BMICH celebrates Int’l Women’s Day

Lincoln

புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபைக்கு இடைக்கால தடையுத்தரவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy