Colombo (News 1st) சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில், சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை பரிசோதகர்களால் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 218 பஸ்கள் விபத்திற்குள்ளாகியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக எரந்த பெரேரா தெரிவித்தார்.
You must be logged in to post a comment.