Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன விலகியுள்ளார்.
இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, நிதியமைச்சு அவரது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.