Sangathy
News

சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான 10 மாணிக்கக்கற்களை பெற்றுக்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Colombo (News 1st) சுமார் 8 கோடி ரூபா பெறுமதியுடைய 10 மாணிக்கக்கற்களை பெற்றுக்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவையை சேர்ந்த 78 வயதான ஓய்வு பெற்ற மீன்பிடி பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, கண்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க நகை விற்பனையகம் ஒன்றில் 21 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

அதே கடையில் ஊழியராக பணிபுரிந்த அவர் 09 தங்க மோதிரங்கள் மற்றும் 04 வெள்ளி மோதிரங்களை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related posts

நீர் கட்டணங்களுக்கான சூத்திரம் தொடர்பில் கலந்துரையாடல்

John David

ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு

John David

No let-up in inclement weather

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy