Colombo (News 1st) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்லாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல மாகாணங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.