Sangathy
News

இந்திய உயர்ஸ்தானிகருடன் அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடல்

Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

பல வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கை – இந்திய உறவினை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் தேசிய  மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

U.S. asks travellers to India to exercise ‘increased caution’ due to crime, terrorism

Lincoln

கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மீண்டும் கோரிக்கை

John David

உதிரிப்பாகங்கள் என்ற பெயரில் 35 கோடி ரூபா பெறுமதியான 3 சொகுசு கார்கள் இறக்குமதி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy