Colombo (News 1st) நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் சாதாரண சேவைக்கான கட்டணமாக 5000 ரூபா அறவிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment.