யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-11-2022
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை
நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
ஓடியே போனதுவோ எட்டு ஆண்டுகள் அம்மம்மா
காலங்கள் பல சென்றாலும் உன் கண் விழி
கண் அசைக்க மாட்டாயா எங்கள் அம்மம்மாவே
கடைசிவரை நான் கல்லறை வரும்வரை
உந்தன் நினைவு எம் நெஞ்சை விட்டு
அகலாத மெழுகுவர்த்தி அம்மம்மாவே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்…