பிறப்பு03 MAR 1933
இறப்பு02 JAN 2018
அமரர் நீலாம்பிகை நமசிவாயம்
வயது 84
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கச்சேரியடி, Sri Lanka மன்னார், Sri Lanka Gevelsberg, Germany
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி பண்டியன் தாழ்வு, மன்னார் அடம்பன், ஜெர்மனி Gevelsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீலாம்பிகை நமசிவாயம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2023
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்….
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்….
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண…..
உங்கள் ஆத்மா சாந்திபெற
திருக்கேதிஸ்வரரை பிரார்த்திக்கின்றோம்..