(முன்னை நாள் விவாக பிறப்பு இறப்புப் பதிவாளர்)
மறைவு – 23 FEB 2013
புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) பிரான்ஸ், France
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியில் வசித்தவரும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் – எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா…!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!