Sangathy
News

அலி சப்ரி ரஹீமினால் கொண்டுவரப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அரசுடைமை

 

Colombo (News 1st) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று(23) முற்பகல் துபாயிலிருந்து நாடு திரும்பிய போது, தங்க பிஸ்கட்கள் மற்றம் கையடக்க தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

COP27: India’s updated NDCs insufficient for cutting emissions, shows report

Lincoln

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று தலவாக்கலையில் தடம்புரண்டுள்ளது. இன்று மாலை 04.50 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையக ரயில் மார்க்கத்திலான இரவு தபால் ரயில் இன்று தாமதமடையும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Lincoln

SC to hear SJB’s FR petition over govt.’s failure to release funds for LG polls

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy