பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 மீனவா்கள் உயிரிழந்தனா். 2 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்திய எல்லையை ஒட்டிய ஹஜாம்ரோ பகுதியருகே அரபிக் கடலில் 45 போ் சென்று கொண்டிருந்த குறித்த படகு, மோசமான வானிலை காரணமாக கடலுக்குள் மூழ்கியதாக இராணுவம் தெரிவித்தது.
விபத்துப் பகுதியிலிருந்து 12 மீனவா்கள் மீட்கப்பட்டதாகவும், மாயமான 2 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினா்.