Sangathy
Srilanka

நாடு திரும்பிய முருகன் உள்ளிட்ட மூவர்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் உள்ளிட்ட மூவரும் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர்.

அவர்கள் மூவரும் திருச்சி முகாமிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டநிலையில், இன்று காலை 10 மணிக்கு கொழும்பு வரும் விமானம் மூலம் மூவரையும் பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

முன்னாள் இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன், முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அண்மையில் சாந்தன் உயிரிர்ந்தார். இதேவேளை எஞ்சிய மூவரும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.

Related posts

விடுதியொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு..!

Lincoln

மாத்தறையில் பார ஊர்தியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு..!

tharshi

ஆள் கடத்தலுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy