ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள் ஒருவர், தேர்வுக்கு பயந்து 10-வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் விகார் ரஸ்தோகி. மகாராஷ்டிரா உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் ராதிகா ரஸ்தோகியும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரும் அரசு உயர் பதவியில் உல்ளார். இவர்களுக்கு லிபி (27) என்ற மகள் இருக்கிறார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே, அவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடிக்கு சென்ற லிபி, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
சட்டப்படிப்பில் இறுதியாண்டு தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்த லிபி, தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.