அடுத்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல் ராஜபக்சவே நாட்டை ஆள்வதற்கு பொருத்தமான தலைவர் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ஆட்சியாளர்கள் சரிவர செயல்படாவிட்டால் அவர்களை விரட்டுவது தேரர்களின் கடமையாகும். அந்தவகையில் இந்த அரசாங்கம் அடுத்த தேர்தலின்போது நிச்சயம் விரட்டியடிக்கப்படும்.
மக்களுடன் இணைந்து இதற்குரிய சமர் முன்னெடுக்கப்படும். நாமல் ராஜபக்சவுக்கு பக்கபலமாக பிக்குகள் திரண்டுள்ளனர். தேசியவாத சக்திகள் திரண்டுள்ளன. எனவே, நாமலை ஆட்சிக்கு கொண்டுவந்ததால்தான் இந்நாட்டை பாதுகாக்க முடியும்.” என்றார்.
