கோலாலம்பூரில் வீதியில் மோட்டார் சைக்களில் சாகசம் செய்த ஆறு பேர் கைது!

கோலாலம்பூரில் உள்ள பல பரபரப்பான வீதிகளில் ஆபத்தான சாகசங்களைச் செய்தனர் என நம்பப்படும், நான்கு சிறார்கள் உட்பட ஆறு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளது.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமுலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி இசா கூறுகையில், இந்தச் சம்பவங்கள் மே 23 அன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும், ஆனால் இந்த சாகசங்கள் அடங்கிய வைரல் வீடியோ மே 31 அன்றுதான் வெளிவந்ததாகவும் தெரிவித்தார்.

44 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துன் ரசாக் மற்றும் ஜாலான் பி ராம்லீ ஆகிய வீதிகளில், பின்னால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆபத்தான சாகசங்களைச் செய்வது காட்டப்படுகிறது.

நேற்று அதிகாலை 3.20 மணியளவில், 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்த 16 வயது பெண் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 12.54 மணிக்கு நடத்தப்பட்ட இரண்டாவது நடவடிக்கையில், 17 மற்றும் 16 வயதுடைய மேலும் இரண்டு ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், அவர்களுடன் பின்னால் அமர்ந்து பயணித்த 18 மற்றும் 15 வயதுடைய பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

வைரலான காணொளியில் இந்த ஆறு பேரும் சம்பந்தப்பட்டிருந்ததாக காவல்துறை நம்புகிறது.

அவர்களில் நான்கு பேர் சிறார்கள் என்பதால், வாக்குமூலம் அளித்த பின்னர் ஆறு சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அலட்சியமாகவும் அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles