சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5:06 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ள்ளூர் அதிகாரிகள் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றனர்.
முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 5 ரிக்டர் அளவில் சில தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
