நைஜீரியாவில் திருமணம் செய்துகொண்ட 1,500 ஜோடிகள்

வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒரு வழி என பிராந்திய அரசாங்கம் விவரித்தது.

பொருளாதார ரீதியாக நிலையற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பங்களுக்கும், கணவன்மார்களாகிய எங்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவுவதே இந்தத் திருமணத்தின் முழு நோக்கமாகும். அதனால்தான் அரசாங்கம் எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவுகிறது என்று மணமகன் அபுபக்கர் அலியு மூசா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

யூசுப் நிர்வாகம் கூட்டுத் திருமணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும்.கானோவின் பிராந்திய அரசாங்கத்தின்படி, ஒவ்வொரு மணமகளுக்கும் 200,000 நைரா (147 டாலர், 127 யூரோ) வரதட்சணையாகவும், ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான ஆதரவும் வழங்கப்பட்டது.

தம்பதியினருக்கு படுக்கைகள், மெத்தைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கானோவில் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும், கண்ணியமான குடும்ப வாழ்க்கையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு துணிச்சலான சமூகத் தலையீடு” என இந்தத் திட்டத்தை ஆளுநர் யூசுப் விவரித்தார்.

திருமணச் செலவைச் சமாளிக்க சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், குடும்பங்களை வலுப்படுத்தவும், மாநிலத்தில் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles