மலேசியாவின் சிபூவில் 5 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து, அவனது உறவினர் ஒருவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர்.
வீட்டில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்களுக்குள்ளான சிறுவன், சிபூ மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டமை உறுதிச் செய்யப்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த பொலிஸார், 40 வயதிலான சந்தேக நபரைக் கைது செய்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக கொலை குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் 302 – ராவது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து, தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
