மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் இந்தியத் தூதர்

A man in traditional attire presents an orange-wrapped gift to a seated monk in orange robes in a decorated living room.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப் பெற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்தினார் என்றும், அவர்களின் ஆசிகளைப் பெற்றார் என்றும் இந்தியத் தூதுவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்து அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும், திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles