Colombo (News 1st) ஹமாஸ் தீவிரவாதத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உரிமையும் இஸ்ரேலுக்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடன் அமெரிக்கா நிற்குமெனவும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமெனவும் அமெரிக்க ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல்களில் 14 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் பணயக்கைதிகளாகப் பிடிபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஹமாஸ் அமைப்பின் இந்த வெறித்தனமான செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
கொல்லப்பட்ட அல்லது காணாமல் போயுள்ள அமெரிக்க பிரஜைகள் தொடர்பான அடையாளங்கள் அதிகாரிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment.