Sangathy
News

வறட்சியால் களனி கங்கையின் நீர்மட்டம் குறைவு

Colombo (News 1st) நிலவும் வறட்சி காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் நீர் விநியோகத்திற்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக அணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி மற்றும் வெப்பத்தினால் நீர் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நீரை விரயமாக்காது சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

John David

இலங்கை கடலில் மீன் பிடித்த 15 இந்திய மீனவர்கள் கைது

John David

US military asks for public’s help to find F-35 fighter jet

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy