Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு ஆசிரியர்கள் வருகை தராமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விஞ்ஞான பாடத்திற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை இரு கட்டங்களாக மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.