வயது 63
முள்ளியான், Sri Lanka (பிறந்த இடம்)
யாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இணை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்…
இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா…
ஆண்டுகள் பன்னிரண்டு கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்…
தகவல்: குடும்பத்தினர்