யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், புதுமுறிப்பு மகா தேவ ஆச்சிரமம் பின் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராசமணி அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், சிவக்கொழுந்து, தங்கக்குட்டி, ஐயாத்துரை, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சொர்ணம், பூபதி, நடராசா, மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி(கொழும்பு), உதயகுமார்( பிள்ளையார் ராசன் -கனடா), காலஞ்சென்ற நாகேந்திரகுமார், தயாநிதி(புதுமுறிப்பு), காலஞ்சென்ற மகாலட்சுமி, வசந்தமலர்(கௌரி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, அமிர்தலிங்கம், ஜெயராசா மற்றும் பிரபா(கனடா), செந்தில்நாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காந்தி(சிவநகர்), காந்தரூபன்(கனடா), சுதா(புதுமுறிப்பு), சுதன், கரன், கவி, காலஞ்சென்ற கண்ணா, திரு, தம்பா(கொழும்பு), மற்றும் பிரியா(திருகோணமலை), தனுஷா, மிலோசன்(புதுமுறிப்பு), கபில், சினோ, ஜசி, கௌதம்(கனடா), கீர்த்தனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காவியன், இலக்கியன், லாவனியன், றிதுபன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
பிரஜிவன், அஸ்லியா ஆகியோரின் அன்பு கொள்ளுபேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.