யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய நொச்சிக்குளம் நேரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இலட்சுமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் தந்த அம்மாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தாயே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம்
கண்ணீரில் ஆண்டுகள் மூன்று
ஆனாலும் ஆசை அம்மாவே
உம் நினைவுகள் எம்மோடு
நித்தமும் பாசமாய் எம் இதயத்தில்
வாசமாய் ஆனவரே அம்மாவே!
ஆண்டு பல ஆனாலும் ஆறாது
எம் துயரம் நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம் உங்களை
நினைவு கூர்ந்து இந் நாளில்
துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி உங்கள்
ஆத்மா சாந்தியடையட்டும்!