யாழ். புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen -Gossau வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-09-2022
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் ஆத்மசாந்தி பூஜை 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Marktstübli Gossau Gutenbergstr.8 9200 Gossau SG எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் குடும்ப சகிதம் வந்து கலந்து கொள்ளும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.