யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுசிலா சுதாகரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு ஆனாலும் உம்
நினைவுகள் புரலாது எம் இதயத்தில்
அன்னை என்று நாம் அழைத்திட
யாருண்டு இவ்வுலகினில்
நம்மை விட்டு ஏன் பிரித்தான்
இறைவன் உம்மை?
கண்ணை இமை போல் காத்த எம்
அன்னை காணவில்லை!
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில்
கனவினில் உன் திருமுகம்
காண்கையில் கண் விழித்து
தேடுகின்றோம் உம் விம்பம் காணவில்லை!
கண்களில் வழிந்திடும் கண்ணீர்
துடைத்திட யாருண்டு அம்மா!
நிலையற்ற வாழ்வில் நிலையான
உமதன்பை தேடியே உருகுகின்றோம்!
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..