யாழ். புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நடமாடிய வீட்டில்
படமாகிப் போனவளே!
உம்மை எம் மன வீட்டில்
சுமந்து நிற்கின்றோம்!
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
மனதோடு எமை சுமந்து
பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர்
நெஞ்சை விட்டு நீங்காது
உந்தன் நினைவலைகள்.
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.