Sangathy
News

கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு விபத்துகளில் ஐவர் பலி

Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தங்காலை – ஹம்பாந்தோட்டை வீதியின் கொடிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

லொறி ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியின் 6 ஆவது ஒழுங்கைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீப்பே – இங்கிரிய வீதியின் பிட்டும்பே பகுதியில் அம்பியூலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் 32 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பியூலன்ஸின்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நிவித்திகல – கலவான வீதியில் பஸ் ஒன்றில் மோதி 73 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் போஅத்த பகுதியில் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு வாகனமொன்று தப்பிச் சென்றுள்ளது.  விபத்தில் காயமடைந்த பாதசாரி, வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Labour’s illusion of guaranteed Victory

Lincoln

கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதி – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

John David

PSC proposes amendment to Children and Young Persons Ordinance

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy